கழிவு நீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 நாள்களுக்குப் பின் மேலும் ஒருவர் சடலமாக மீட்பு.!

கரூர் மாவட்டம் சுக்காலியூரில் கழிவு நீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 நாள்களுக்குப் பின் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் போட பயன்படுத்திய கட்டைகளை அகற்றும் போது மோகன்ராஜ், சிவக்குமார், ராஜேஷ்குமார் ஆகிய மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், சிவக்குமாருடன் வேலைக்கு வந்த சின்னமலைப்பட்டியைச் சேர்ந்த கோபால் என்பவரை காணவில்லை என்று அவரது அண்ணன் அளித்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு சோதனை செய்த போது கோபாலும் உள்ளே இறந்து கிடந்தது தெரியவந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.