அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வை கடத்தி ரூ.1.50 கோடி பறித்த வழக்கு.. நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய குற்றவாளி..!

ஈரோடு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடத்திச்சென்று ஒன்றரை கோடி ரூபாய் பறித்த வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி, 7 பேர் கும்பல் தன்னை காரில் கடத்திச்சென்று, அடித்து துன்புறுத்தி, ஒன்றரை கோடி ரூபாய் பறித்ததாக ஈஸ்வரன் போலீசில் புகாரளித்திருந்தார்.

அந்த கும்பலை சேர்ந்த 6 பேரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மிலிட்டரி சரவணனை தேடிவந்தனர்.

இந்நிலையில், ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்த மிலிட்டரி சரவணனை, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.