இந்தோனேஷியாவில் நில நடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்தனர்.

அங்குள்ள சியாஞ்சுர் நகரில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளி 6 பதிவான இந்த நிலநடுக்கத்தால், சில அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 300 க்கும் மேற்பட்டோரில், சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஜகார்த்தாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.