“தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!" – வானிலை ஆய்வு மையும் தகவல்

தென்மேற்கு கடலில் நிலவுகின்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து, கிழக்கு தென் கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலையில் மையம் கொண்டிருக்கிறது. இது, நாளை (22.11.22) தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை கனமழை

நாளை (22.11.22), வடதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை கனமழை

ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும், தமிழக – புதுவை கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 22.11.2022 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதேபோல, மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.