பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்ணடியன் குடிசை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகள் சூர்யா என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி சூர்யா தீக்குளித்து இறந்துவிட்டதாக ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காஞ்சிபுரம் வந்த அவர்,
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவர் வீட்டில் அனைவரும் சேர்ந்து தனது மகளை சித்ரவதை செய்து கொன்றுவிட்டார்கள் என அவர் கூறியுள்ள நிலையில், திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.