மனைவியிடம் சமாதானம் பேச சென்ற கணவன் கல்லால் அடித்துக்கொலை

சேலம் சங்ககிரி அருகே குடும்பத்தகராறில் பிரிந்து வாழ்ந்துவந்த மனைவியை, வீட்டிற்கு அழைத்து வர சென்ற கணவனை, கல்லால் அடித்துக்கொலை செய்ததாக, மனைவி உட்பட்ட அவரது குடும்பத்தினர் 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தாசநாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர்கள் தனபால் – சரிதா தம்பதியினர். இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த சரிதா, தனது 2 பிள்ளைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனபால் சமாதானம் பேச சென்றபோது, மனைவி, மைத்துனர், மாமியார், மாமனார் ஆகியோர், கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த தனபாலை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனபாலின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.