ரயிலில் அசுத்தமான போர்வை, தலையணை வழங்கப்பட்டதால் நள்ளிரவில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியா வரை செல்லும் ஏக்தா அதிவிரைவு ரயிலில் குளிர்சாதன பெட்டியில் அசுத்தமான போர்வை, தலையணை வழங்கியதாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம் நடத்தினர்.

சென்னையிலிருந்து இரவு 10.40 மணிக்கு ரயில் புறப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்தை கடக்க இருந்தபோது ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

பணியிலிருந்த அரக்கோணம் ரயில்நிலைய அதிகாரிகள், அரக்கோணம் ரயில் நிலையத்தில் அதற்கான வசதிகள் இல்லையெனவும் அடுத்த ரயில் நிலையமான ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அளிப்பதாகவும் பயணிகளிடம் தெரிவித்ததையயடுத்து 20 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.