கடந்த 5 வருடத்தில் இந்திய வங்கிகள்  சுமார் 10லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்தி (Write-Off) வைத்துள்ளது! ஆர்டிஐ-ல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…

டெல்லி: இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் சுமார் 10லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது,  ஆர்டிஐ-ல் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது. அது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகள் தங்கள் செயல்படாத சொத்துக்களை (NPAs) அல்லது செலுத்தாத கடன்களை 10,09,510 கோடி ரூபாய் ($123.86 பில்லியன்) குறைக்க இந்த மெகா தள்ளுபடி நடவடிக்கை உதவியுள்ளது. (RBI) தி இந்தியன் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) கோரிக்கைக்கு  அளித்துள்ள பதில் மூலம் அம்பலமாகி உள்ளது.   இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் வெறும் 13 சதவீத தொகையை மட்டுமே வசூலித்துள்ளது

பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 17,123 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற நிலையில் நடப்பு நிதியாண்டில் சுமார் 50 சதவீத வளர்ச்சியில் 25,685 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் லாப அளவீட்டில் பதிவு செய்யப்பட்ட சாதனை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த டிவீட்டில், வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை (என்பிஏ) குறைப்பதற்கும், வங்கிகளின் மேம்படுத்தும் அரசின் தொடர் முயற்சிகளே பொதுத்துறை வங்கிகளின் லாபம் உயர்வுக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் சுமார் 10லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளன. இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் 13 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது .  நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள்,  50 சதவீத வளர்ச்சியுடன், 25,685 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திரந்தார். மேலும்,  பொதுத்துறை வங்கிகளின் லாப அளவீட்டில் பதிவான சாதனை என்றும்,  வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை (என்பிஏ) குறைக்க அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியே பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரித்ததற்குக் காரணம் என்று கூறியுள்ளார். .

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ சட்டத்தின்மூலம்கேள்வி எபப்பி இருந்தார். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக உள்ளது. அதில், இந்திய ரிசர்வ் வங்கி  பல கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்வதாக பதிலளித்துள்ளது.

2022-23 நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை 16.61 லட்சம் கோடி ரூபாயாக இருந்தால், இந்த 10 லட்சம் கோடி வாராக் கடன் தொகை முழுமையாக வசூலிக்கப்பட்டது, நிதிப் பற்றாக்குறையில் 61 சதவீதத்தை தீர்க்க முடியும். 7,29,388 கோடிகள் கடந்த நிதியாண்டில் 5.9 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒத்திவைக்கப்பட்ட ரூ.10 லட்சம் கோடி வாராக் கடனில் ரூ.1,31,036 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் வாராக் கடன் அல்லது செயல்படாத சொத்துக்கள் பிரிவில் இருக்கும் 10,09,510 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.

இதேவேளையில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு 2017-18ல் 11.2 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் 2022 உடன் முடிந்த நிதியாண்டில் 5.9 சதவீதமாகக் குறைந்து 7,29,388 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த 5 வருடத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனில் வெறும் 1,31,036 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் வெறும் 13 சதவீத தொகையை மட்டுமே வசூலித்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

வங்கிகள் ஒரு கடனை வசூலிக்க முடியாமல் வாராக் கடனாக அறிவித்தால் சில காலம் அக்கடனை வசூலிக்க முயற்சிகளை மேற்கொள்ளும், முயற்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் இக்கடனை ஒத்திவைத்து (Write-Off) விடும். ஒரு கடன் ஒத்திவைக்கும் பட்சத்தில் இந்தக் குறிப்பிட்ட கடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் இருந்து வெளியேறும். வரிச் சேமிப்பு அப்படி வெளியேறும் பட்சத்தில் வங்கியின் வாராக் கடன் அளவு குறைவது மட்டும் அல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட கடனுக்கான வரியும் சேமிக்க முடியும். கடனை ஒத்திவைக்கப்பட்ட பின்பு வரியை வங்கியின் லாபத்தில் வரிக்கு முன்பே கழிக்க முடியும். இதனால் வங்கிகளின் நிதி நிலை மேம்பட வாய்ப்புகள் உள்ளது.

வங்கிகளால் கடனை வசூலித்து அதன் வாராக் கடனை அறிவிக்க முடியாவிட்டால், அவர்கள் கடனை வசூலிக்க சிறிது நேரம் முயற்சிப்பார்கள், முயற்சிகள் தோல்வியுற்றால், கடன் தள்ளுபடி செய்யப்படும்.

கடன் ஒத்திவைக்கப்பட்டால், இந்த குறிப்பிட்ட கடன் வங்கியின் கணக்கு புத்தகங்களில் இருந்து அகற்றப்படும். அப்படியானால், வங்கியின் வாராக்கடன் தொகை குறைவது மட்டுமின்றி, ஒத்திவைக்கப்பட்ட கடனுக்கான வரியும் சேமிக்கப்படும்.

கடன் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, வரிக்கு முன் வங்கியின் லாபத்தில் இருந்து வரி கழிக்கப்படும். வங்கிகளின் நிதி நிலைமையை மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக கடன் வசூலிக்க முடியாததால், வங்கியின் புத்தகங்களில் இருந்து கடனை நீக்க முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கடனை முழுவதுமாக கைவிடாமல், கடனை வசூலிக்க சிறப்புக் குழு அமைத்து, வசூலிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கடனை 3 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்தவில்லை என்றால், அது மோசமான கடனாக மாறும்.

இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் பொருளாதார வல்லுநர்கள், இந்த  10 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை முழுமையாக வசூலித்து இருந்தால், நாட்டின் 61% நிதி பற்றாக்குறை தீர்க்கப்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.