சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெற்ற சங்காபிஷேகம்..!

தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு  சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் கார்த்திகை சோமவார விழாவை முன்னிட்டு சங்கு அபிஷேகம் நடந்தது .

 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் மகா சங்காபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் கார்த்திகை மாதம் முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு சிவனுக்கும், அம்பாளுக்கும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.