ரஷ்யா நடத்திய தாக்குதலால் குளிர்காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற திட்டம்

உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலால் குளிர்காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

கெர்சன் மற்றும் மைகோலைவ் நகரில் இருந்து இது தொடங்கலாம் என்றும், அவர்கள் உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு பகுதிக்கு மாற்றப்படுவார்கள் என்றும்  துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

இந்த குளிர்காலம் உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.