சீர்காழி, தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது..!!

மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது. சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் 238 ரேசன் கடைகளில் 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. சீர்காழி அருகே மணி கிராமத்தில் ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா, எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் நிவாரணம் வழங்கி தொடங்கி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.