அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து இந்த ஆண்டு தொடக்கம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் தினந்தோறும் 34,909 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், கொரோனா பரவல் அதிகம் உள்ள, வூகானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் மேற்கு பகுதியான ஷின்ஜியாங் பிராந்தியத்தில் கடந்த 100 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. நாட்டில் உள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஜிங்ஜியாங் பகுதியில் தான் அதிகநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ரும்கியில் உள்ள சுமார் 4 மில்லியன் குடியிருப்பு வாசிகள், கடந்த 100 நாட்களாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து 100 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போட்டோ வீடியோ கலைஞர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்
அதேபோல் சீனாவின் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள் சுமார் 10 மில்லியன் பேர் இங்கு வசித்து வருகின்றனர். சீனாவில் சிறுபான்மையின உய்குர் முஸ்லிம்களுக்கு, அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுவதாகவும், தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடதக்கது.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி; அம்பலப்படுத்திய இளவரசருக்கு உயரிய விருது.!
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழைமை அன்று இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே செல்ல முயன்றபோது, ஊரடங்கு காரணமாக குடியிருப்பு வளாகத்தின் பாதிப் பகுதி மூடப்பட்டிருந்ததால் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கோபமடைந்த மக்கள், நீண்ட கால ஊரடங்கை தளர்வு படுத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘அடிமையாக இருப்பதை வெறுப்பவர்களே எழுங்கள்’ என்ற சீனாவின் தேசிய பாடலை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது.