தேசிய உதைபந்தாட்டத்தில், மகாஜனா கல்லூரி 17 வயது பெண்கள் அணி சாதனை

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயது பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி  கொழும்பு களனி பிரதேசசபை (24)மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலய அணியை எதிர்கொண்ட மகாஜனக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

இந்த போட்டியில் இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.