கடையை மூடும் அமேசான்… டிசம்பர் 29 கடைசி நாள்!!

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையை டிசம்பர் 29ஆம் தேதியோடு நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மே 2020இல் அமேசான் இந்தியாவில் உணவு சேவையை தொடங்கியது. இந்நிலையில் வரும் மாதம் 29ஆம் தேதி சேவை நிறுத்தப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் சோதனையில் உள்ள உணவு விநியோக சேவையை டிச. 29 முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு, வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிச. 29க்கு பிறகு அமேசான் ஃபுட் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறமாட்டீர்கள். அதுவரை தொடர்ந்து ஆர்டர்களைப் பெறுவீர்கள், அதனை நிறைவேற்றுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளது.

மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அந்தவகையில், அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் அமேசான் அகாடமியை மூட முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இந்தியாவில் தனது உணவு டெலிவரி சேவையை நிறுத்த அமேசான் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.