தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானோஜிப்பட்டி வனதுர்க்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மகன் விஜய் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவர் தனது செல்போனில் ஹெட்போனை இணைத்து கொண்டு பேசியப்படி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது வந்த ரெயில் விஜய் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் தலைமைகாவலர் சிவ வடிவேல் உத்தரவுப்படி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அதன் பின்னர், விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.