மருத்துவமனைக்கு செல்லும்போது பாதி வழியிலேயே ஆம்புலன்ஸ் பெட்ரோல் இல்லாமல் நின்றதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த தேஜியா (40) என்பவருக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அவர் மயக்கம் அடைந்ததால் பதற்றம் அடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர்.
வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸ் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் டானாபூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென நின்றது.
டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நின்றது தெரியவந்தது. எனவே அவரை அழைத்துச்செல்ல மற்றொரு ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டனர். பின்னர் வேறொரு ஆம்புலன்ஸ் வந்த பிறகு, அவரை அதில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
மருத்துவமையில் தேஜியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், கொஞ்ச நேரம் முன் வந்தால் காப்பாற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மருத்துவ நிர்வாகிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in