கார் வெடிப்பு குறித்து அவதூறு; பா.ஜ ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது

கோவை: சென்னையை சேர்ந்தவர் பா.ஜ ஆதரவாளர் கிஷோர் கே.சாமி. இவர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிந்ததாக கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் 23ம் தேதி உக்கடம்  பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சுவாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் கிஷோர் கே.சாமி கைது செய்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பு ஆஜர்படுத்தினர். வருகிற 12ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும், மாநகர சைபர் கிரைம் போலீசார் 2 மணி நேரம் விசாரிக்கவும்  நீதிபதி சரவணபாபு அனுமதி அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.