அஜித்தின் சொந்த வாழ்க்கையும், துணிவும் ஒத்துப்போகும் – போனிகபூர் அசத்தல் அப்டேட்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத்துடன் அஜித் கைகோர்த்திருக்கிறார். முதல் இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூழலில் துணிவு படம் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது..

அஜித் இதுவரை நடித்த நெகட்டிவ் ரோல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதனால் துணிவு படம் ஹிட்டடிக்கும் என காத்திருக்கின்றனர் ஏகே ரசிகர்கள். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

பொங்கல் தினத்தன்று விஜய்யின் வாரிசு படமும் வெளியாகவிருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் அஜித்தும், விஜய்யும் திரையில் மோதிக்கொள்ளப்போவதால் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவலும் இருவரின் ரசிகர்களுக்கும் எழுந்திருக்கிறது. 

இதற்கிடையே துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. அஜித் தனது டப்பிங் போர்ஷனை நிறைவு செய்துவிட்டார். விரைவில் சில்லா சில்லா பாடலும், ட்ரெய்லரும் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் துணிவு குறித்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “அஜித்குமாரை இதுவரை பார்க்காத கேரக்டரில் இந்தப் படத்தில் பார்க்கலாம். அவரது சொந்த வாழ்க்கையின் சில தருணங்கள் இந்தப் படத்துடன் ஒத்து போயிருக்கிறது” என கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.