தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு இசை மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் அது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கொடைக்கானளுக்கு சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இவர் இசை குறித்து ஆய்வு செய்வதற்காக அடிக்கடி தனது அறையை பூட்டிவிட்டு அதிகாலையிலேயே வெளியில் சென்றுவிடுவார். அன்று இரவு அல்லது மறுநாள் தான் மீண்டும் அறைக்கு வருவார்.
இந்நிலையில், வழக்கம் போல் ஆய்விற்கு சென்ற சூர்யா அறைக்கு வரவில்லை. இதையடுத்து இன்று காலை அவர் அறைக்கு அருகில் இருந்த ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூர்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பிறகுதான் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், சூர்யா மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதுதவிர அவர் தங்கியிருந்த அறை, அவரது அறைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் யார்?, சூர்யாவின் செல்போன், விடுதி ஊழியர்கள், என்று அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.