போபால் : மத்திய பிரதேசத்தில், நேற்று அதிவேகமாக வந்த லாரி, சாலையோர பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில், ஆறு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில், ரட்லம் – லேபாத் சாலை சந்திப்பு அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில், நேற்று மாலை பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.அப்போது, அதிவேகமாக வந்த லாரி, பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இவர்களில் எட்டு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement