நாகை: காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிச.8 வரை மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் 700 விசைப்படகுகளும், 3,000 பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
