தமிழ் உட்பட தென்னிந்திய மொழிப்படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி. சமீபத்தில் தன் காதலன் சோஹேல் கதுரியாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார். அதோடு தன் காதலன் ஈபிள் டவர் முன்பு தனது காதலை தன்னிடம் வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இந்நிலையில் ஹன்சிகாவிற்கு கடந்த இரண்டாம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடந்தது. முதல் நாளில் மருதானி வைக்கும், நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலையில் மஞ்சள் வைக்கும் சடங்கு நடந்தது. அதனை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக அவர்களுக்கு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். திருமணத்திற்கு பிறகு மணமக்கள் ஒன்றாக நடந்து வருவது போன்ற வீடியோ மற்றும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. திருமணத்திற்கு ஹன்சிகா சிவப்பு கலர் லெஹங்காவும் உடம்பு முழுக்க தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தார். இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட போது வான வேடிக்கைகளுடன் பட்டாசு வெடிக்கப்பட்டது. சிந்தி முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. ஹன்சிகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் திருமண சடங்குகள் தொடர்பாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். புதுமணத்தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள் சோசியல் மீடியா மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.