திருச்சி மாவட்டத்தில் விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் (22) மற்றும் தட்சிணாமூர்த்தி (22), ஆனந்த் குமார் (22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
மேலும் காரில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பாண்டிச்சேரியை சேர்ந்து விக்கி என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு விற்பனைக்காக திருச்சிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முக்கிய கஞ்சா குற்றவாளியான விக்கியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி தீவிரமாக வருகின்றனர்.