சபரிமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை – இன்று ஒரு லட்சம் பேர் முன்பதிவு!

சபரிமலையில் நேற்று (08.12.22) முதன்முறையாக அதிகபட்சமாக 89 ஆயிரத்து 63 பேர் சாமி தரிசனம் செய்தனர். இன்று (09.11.22) முதன்முறையாக அதிகபட்சமாக ஒரு லட்சத்தும் அதிகமானோர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தனர். இன்று காலை 8 மணி வரை 33,701 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரி சராசரியாக 50 முதல் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த நவம்பர் 28ம் 84 ஆயிரம் பேரும், டிசம்பர் 5ம் தேதி 82 ஆயிரம் பேரும், நவம்பர் 26ம் தேதி 78 ஆயிரம் பேரும் தரிசனம் செய்திருந்தனர்.
சபரிமலையில் வியாழக்கிழமையான நேற்று (08.12.22) 96 ஆயிரத்து 30 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் முதன்முறையாக அதிகபட்சமாக 89 ஆயிரத்து 63 பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை முதன்முறையாக அதிகபட்சமாக (09.12.22) |1,07,695 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் காலை 8 மணி வரை 33,701 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
image
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட சபரிமலையில் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரையிலான 24 நாட்களில் 15 லட்சத்து 99 ஆயிரத்து 16 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். கடந்த 24 நாட்களில் இதுவரை 13 லட்சத்து 43 ஆயிரத்து 288 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேரளா அரசு துறைகள் சார்பிலும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.