சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் மழை!!

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

புயலானது சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

எழும்பூர், கிண்டி, ஆலந்தூர், பல்லாவரம், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதே போல் கடல் கரையை கடக்க உள்ள மாமல்லபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.