மாண்டஸ் புயல்: இன்றிரவு எங்கெல்லாம் பவட் கட்… மின்சார வாரியம் சொல்வது இதுதான்!

வங்க்க் கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 11:30 மணிக்கு, புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கும் என்றும், அதிகாலை 2:30 மணி வரை புயல் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அத்துடன் புயல் கரையை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் மணிக்கு 85 கிலோமீட்டர் வரை வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல், மழை காரணமாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்றிரவு மின் விநியோகம் தடை செய்யப்படுமா என்ற அச்சம் கலந்த கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

பொதுமக்களின் இந்த கேள்விக்கு, தமி்ழ்நாடு மின்சார வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. புயலின் விளைவாக மின்சார ஒயர்கள் அறுந்து விழுவது, மின் கம்பங்கள் சாய்வது போன்ற இடர்பாடுகளை சரிசெய்ய 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப முன்னெச்சரி்க்கை நடவடிக்கை தேவைப்படும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் தடை நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் மீண்டும் மின் விநியோகம் தரப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரையிலான எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளிட்ட புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளை தவிர, மாநகரின் மர்ற பகுதிகளில் இன்று இரவு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.

இதேபோன்று,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பேருந்துகள் இன்று வழக்கம்போல இயக்கப்படும் எனவும் தமிழக போக்குவரத்து் துறை அமைச்சர் சிவசங்கரன் அறிவித்திருந்தார்.

அதேசமயம் புயல், மழை காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் இன்று மதியம் அறிவித்திருநத்து.

மாண்டஸ் புயல், புதுச்சேரிக்கும், ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு இடையே, மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.