டபுள் எவிக்‌ஷன், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதிலிருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது.  இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர்.

மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த போட்டியிலிருந்து இதுவரை மொத்தம் 8 பேர் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் கடந்த வாரம் எலிமிநேஷனில் இருந்து குயின்சி வெளியேறினார். 8 வாரங்களுக்கு வீட்டில் இருந்த குயின்சி மொத்தம் ரூ 1.60 லட்சம் வரை பெற்றிருக்க கூடும் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது வரை பிக் பாஸ் சீசன் 60 நாட்களை கடந்துள்ள நிலையில் வரும் நாட்களில் வைல்ட் கார்டு எண்ட்ரி இருக்கும் என்று எதிறப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வழக்கம் போல் ஒரு எவிக்ஷன் மட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது என தகவல் வெளியானது. அதன்படி, ஆயிஷா மற்றும் ராம் இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமிற்கு வாரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ராமிற்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷாவுக்கு தற்போது 29 வயது ஆனது. பிக் பாஸ் வீட்டில் இவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 28 முதல் 30 ஆயிரம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.