இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதா? – மத்திய மந்திரி தோமர் பதில்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்றைக்கான கேள்வி நேரத்தின் போது பருவநிலை காரணமாக இந்தியாவின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளித்து கூறுகையில், 2017-2018-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 285 மில்லியன் டன்னாக இருந்தது.

ஆனால் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 310.74 மில்லியன் டன்னாகவும், 2021-2022-ம் நிதியாண்டில் 315.72 மில்லியன் டன்னாகவும் உயர்ந்துள்ளதாக எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். மேலும் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.