குஜராத் மாநில முதலமைச்சராக பா.ஜ.க.வின் பூபேந்திர படேல் பதவியேற்பு

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் பூபேந்திர படேல் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், 156 இடங்களில் வென்ற பாஜக, ஏழாவது முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடர்ந்து 2ஆவது முறையாக பூபேந்திர படேல் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்ச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து ஒரு பெண் உள்ளிட்ட 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.