புதுடெல்லி: பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்த மதவாத கலவரத்தில் இளம்பென் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கும்பல் குடும்பத்தினரை கொடூரமான முறையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களை முன்கூட்டியே குஜராத் அரசு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து பில்கிஸ் பானு கடந்த மாதம் 30ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அவரின் மனுக்கள் மீது, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் 13ம் தேதி விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி பெலா திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.