இந்த மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 4-ம் தேதி விடுமுறை அறிவிப்பு ..!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவை படுகர் இன மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவிற்கு, மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள்.படுகர் இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும்

இந்த நிலையில், படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (04.01.2023) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.