‘உதயத்தை வரவேற்போம்’: அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி மரியாதை செய்வதற்காக அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்..!

‘சென்னை: தமிழக  அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, தனது தாத்தா கருணாநிதியின் சமாதியில் மரியாதை செய்வதற்காக, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வண்ண மலர்களால், ‘உதயத்தை வரவேற்போம்’ என அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில்,  35அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பதவி ஏற்றதும், அவர் தனது தாத்தாவும், முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மெரினா நினைவிடத்தில் மரியாதை செய்ய உள்ளார். இதையடுத்த, அவருது நினைவிடம்,  உதயநிதியை  வரவேற்கும் வண்ணம், உதயத்தை வரவேற்போம் என  மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.