ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 2 கட்டடங்கள் சேதம்..!

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இரண்டு நிர்வாக கட்டடங்கள் சேதமடைந்ததாக, கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்தார்.

எனினும் ரஷ்யா ஏவிய 10 ஷாஹெட் ட்ரோன்களை, உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும், ஷெவ் சென் கிவ்ஸ்கி மாவட்டத்தில், பல்கலைக்கழகங்கள், காட்சிக்கூடங்கள் மற்றும் உணவகங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் கீவ் மேயர் கூறினார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் குடியிருப்புக்கட்டடம் ஒன்றும் தீப்பற்றி எரிந்ததாகவும் கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.