விபத்தில் காயமடைந்து கோமா நிலைக்கு சென்ற இளைஞரின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள் தானம்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் செங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக், திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர், கடந்த வாரம் மனைவி – குழந்தையை பார்க்க, சொந்த ஊர் சென்றார். அங்கு விபத்தில் சிக்கிய கார்த்திக், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கோமா நிலைக்கு சென்றதாகவும், குடும்பத்தார் அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கார்த்திக்கின் இதயம், கண், கணையம், நுரையீரல், கிட்னி ஆகிய உறுப்புகள் திருநெல்வேலி, பெரம்பலூர் மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.