இலங்கை சுகாதார திட்டத்திற்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் சிலவற்றை சர்வதேச லொட்ரி கழகம் வழங்கியுள்ளது.
இவற்றின் பெறுமதி 60 மில்லியன் ரூபா. இந்த அமைப்பின் சர்வதேச தலைவர் ஜெனிப்பர் சொன்ஜ் இந்த மருந்துகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கையளித்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருந்து வகைகளும், சிறுவர்களுக்கான மருந்து வகைகளும் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின் போது சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது முதற்கட்டத்தின் கீழ் இந்த மருந்து வகைகளை சர்வதேச லொட்ரி கழகம் வழங்கியுள்ளதுடன் மேலும் ஒரு தொகை மருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.