பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

பெங்களூரு,

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதின

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது.பின்னர் 279 என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.இதனால் 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2012,2017 ,2022 என 3 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.