நடுக்கடலில் மூழ்கிய தாய்லாந்தின் சிறிய ரக போர்க்கப்பல்.. 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் தீவிரம்

தாய்லாந்து வளைகுடா கடற்பகுதியில், சிறிய ரக போர் கப்பல் ஒன்று நள்ளிரவு மூழ்கிய நிலையில், அதிலிருந்த 33 கடற்படையினரை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது.

சக்திவாய்ந்த கடல் அலையால், HTMS Sukhothai போர் கப்பலின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்தது. இதனால், கப்பல் ஒருபுறமாக சாய்ந்த நிலையில், அதிலிருந்த 106 பேரில் 73 பேரை பாதுகாப்பாக மீட்டதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.

எஞ்சிய 33 பேரை தேடும் பணியில் மூன்று கடற்படை கப்பல்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.