கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மெக்கா நகரம்..!

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பெய்த கனமழையால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

ஜெட்டா நகரில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு மாதத்திற்குப் பிறகு, இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஸ்தலமான மெக்கா நகரில் கனமழை பெய்தது.

இரவு பெய்த கனமழையால் மெக்காவின் தெருக்களில் மழை நீர் பெருக்கடுத்து ஓடியதால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அடுத்து வரும் நாட்களில் மெக்கா, மதீனா மற்றும் தபூக் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.