அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. பெண் ஒருவர் உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

நாகமங்கலத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கெலமங்கலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்து, கெலமங்கலம் கூட்ரோடு அருகே விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.