ஈரோடு : அனுமதியில்லாமல் மது விற்பனை செய்த 10 பேர் கைது.!

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர். அதன் படி, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் துணை தலைமை காவலர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது கனிராவுத்தர் குளம் காந்திநகர் பகுதியில் அனுமதி இல்லாமல், மது விற்பனையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஆறு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அதேபகுதியில், மது விற்பனை செய்த அண்ணாதுரை என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று அம்மா பேட்டை, அரச்சலூர், பங்களாபுதூர், தாலுகா, சென்னிமலை, கவுந்தப்பாடி, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதிஇல்லாமல் மதுவிற்பனை செய்த 10 பேரிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.