“தமிழ் மக்கள் தன் மீது செலுத்தும் அன்பு, மற்ற மாநிலத்தில் கிடைத்ததில்லை” – ராகுல்காந்தி

தமிழ் மக்கள் தன் மீது செலுத்தும் அன்பு, வேறு எந்த மாநிலத்திலும் கிடைத்ததில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 24-ஆம் தேதி ராகுல்காந்தி டெல்லியில் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணத்தில்,  மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றார்.

அப்போது அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலின்போது,  தமிழ் மக்கள் தன் மீது உணர்ச்சிகரமாக அன்பு செலுத்துவதற்கான காரணம் என்னவென்று ராகுல்காந்தி,  கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு,  தமிழ் மக்கள் தங்களுக்கு பிடித்த தலைவரை காணும்போது, உற்சாகமடைவதாக கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.