பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அம்மாநிலத்தின் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சண்டிகரில் உள்ள முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த வெடிகுண்டை சோதனை செய்து செயலிழக்கச் செய்தனர்.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உயிருள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உதவியுடன் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவக் குழு ஒன்று வரவழைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.