விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த தனியார் பேருந்து நடத்துனர் குடும்பத்திற்கு இழப்பீடு தர ஆணையிடப்பட்டது. உயிரிழந்த சரவணனின் தந்தை அண்ணாமலை கொடுத்த வழக்கில் தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தனது மகனின் இழப்புக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.