டோல்கேட் ஊழியரை, தாக்கிய சட்டமன்ற உறுப்பினர்.. ஆம்புலன்ஸ், அரசு வாகனங்களுக்கு வழிவிட தெரியாதா..? என வாக்குவாதம்..!

தெலங்கானாவில், தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி ஊழியரை, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அடிக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வெல்லம்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் துர்கம் சின்னையா, தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, மந்தமரி டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, காரிலிருந்து இறங்கி வந்த சின்னையா, ஆம்புலன்ஸ், அரசு வாகனங்களுக்கு வழிவிட தெரியாதா? என கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியரை அடித்துள்ளார்.

சின்னையா ஊழியரை அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தெலங்கானா எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.