என்எல்சி சுரங்க கேன்டீனில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் உள்ள கேன்டீனில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களில் சிலர், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை ஷிப்டிற்கு வந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தயிர் சாதத்தில் எலி இறந்து கிடந்ததைக் கண்டு தொழிலாளர்கள், கேன்டீன் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து என்எல்சி பி.ஆர்.ஓவிடம் பேசியபோது, சாப்பாட்டில் எலி விழுந்து ஓடியதாகவும், எலி விழுந்த சாப்பாட்டை சமைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

சாப்பாட்டில் எலி இருந்த வீடியோ வந்துள்ளதை குறிப்பிட்டு கேட்ட பிறகு, எலி விழுந்தது உண்மைதான் என்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.