இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைகழகங்கள்; யுஜிசி வரைவு அறிக்கை.!

மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், கல்வியில் இந்தியாவில் முன்னனியில் இருக்கும் தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை எதிர்த்தது. குலக் கல்வி முறையை ஆதரிக்கிறது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தேசிய கல்வி கொள்கையில் எழுந்தன.

அதைத் தொடர்ந்து மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இந்தநிலையில் தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக வெளிநாட்டு பல்கலைகழகங்களின் கிளைகள் இந்தியாவில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘‘புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதையொட்டி ஏராளமான புதுவித முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அமைப்பதற்கான ஒரு திட்டத்தையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. அதன்படி, வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்து செயல்படுத்துவதற்கான ஒரு வரைவை யுஜிசி வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

அந்த வரைவில், ‘‘இந்தியாவில் தனது வளாகத்தை அமைக்க விரும்பும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனம், சர்வதேச அளவில் முதல் 500 இடங்களுக்குள் இருக்க வேண்டும். ஆண்டறிக்கையை தவறாமல் யுஜிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக முன் அனுமதியின்றி எந்த படிப்பையும் ரத்து செய்வதோ, வளாகத்தை மூடுவதோ கூடாது’’ என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகள் அடங்கிய வரைவு தொடர்பான கருத்துகள், பரிந்துரைகள் போன்றவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜன.18-ம் தேதிக்குள் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெற்காசிய நாட்டின் உயர்கல்வியின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, யேல், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்ட் போன்ற முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்களை அமைத்து பட்டங்களை வழங்க அனுமதிக்கும் நோக்கில் இந்தியா சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முதல் முறையாக நாட்டில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவு மற்றும் செயல்பாட்டை எளிதாக்கும் பொது கருத்துக்கான வரைவு சட்டத்தை வெளியிட்டது. அதன்படி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கை அளவுகோல், கட்டண அமைப்பு மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை வரைவின்படி உள்ளூர் வளாகம் முடிவு செய்யலாம். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுயாட்சி நிறுவனங்களுக்கு இருக்கும்.

இந்திய மாணவர்கள் மலிவு விலையில் வெளிநாட்டுத் தகுதிகளைப் பெறுவதற்கும், இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான உலகளாவிய கல்வி இடமாக மாற்றுவதற்கும், நாட்டின் பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வித் துறையை மாற்றியமைக்க பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் இளம் மக்களைத் தட்டியெழுப்ப உதவும் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.