கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 தமிழக மீனவர்கள் மாயம்!

கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில் வாடி மீன்பிடி தளத்திலிருந்து நேற்று காலை 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் தற்போது வரை கரைக்கு திரும்பாததால் சக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால், இதுவரை மாயமான 4 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து மண்டபம் மீன்வளத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காற்றின் திசையில் படகு நகர்ந்து இலங்கை கடல் பகுதிக்குள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.