சென்னை: கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டிஎஸ்பி, விஏஓ மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோர்ட் ஆணையிட்டுள்ளது. அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அழகு, மதுரவாயல் வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டார்.
