சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிவப்பு சீனி

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிவப்பு சீனியை சுங்கப்பகுதி கைப்பற்றியுள்ளது.

நாட்டில் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீனி வெள்ளை சீனி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்ட்டுள்ளது.

1200 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு இறக்குமதி செய்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாட்டில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இதனை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் வெள்ளை சீனியின் விலையிலும் பார்க்க சிவப்பு சீனி ரூபா100/= அதிகம். மோசடியாக கொண்டுவரப்படும் சீனியை பொது மக்களுக்கு விற்பனை செய்ய சிலர் முற்படுகின்றனர்.இதன் மூலம் சிலர் பெருந்தொகை வருமானத்தை பெருகின்றனர் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.