
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சந்தன் நகர் மற்றும் சத்தாரிப்பூரா என்ற பகுதியில் உள்ள இரண்டு சிவன் கோயில்களில் சில நாள்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
இது அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சில அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரே இளைஞர் தான் அந்த இரு கோயில்களிலும் சிலைகளை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் சுபம் கைத்வாஸ் என்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கண்ணில் பார்வை குறைபாடு கொண்ட சுபம் தனது குறைபாடு நீங்க வேண்டும் என அந்த கோயில்களில் தொடர்ச்சியாக வழிபாடு நடத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரின் தந்தை சிறிய ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.இந்த இளைஞரின் செயலால் அங்கு சமூக பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் மீது காவல்துறை 295ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளது
newstm.in